flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

புதன், ஜனவரி 18, 2012

உடுமலை:உடுமலை அருகே, உயர்நிலையாக தரம் பெற்ற பள்ளியில், போதிய வசதிகள் இல்லாததால் மாணவர்கள் திண்டாடுகின்றனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, 2008-09ல் உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. சுற்றுப் பகுதிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். பள்ளிக்கு தனி கட்டடம் கட்டும் வரை, அமராவதி நகர் துவக்கப்பள்ளி வளாகத்திலேயே, தற்காலிகமாக உயர்நிலைப் பள்ளி செயல்படும் என, கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால், கட்டட வசதி ஏற்படுத்த, இடத்தை தேர்வு செய்யவோ, நிதி ஒதுக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போதிய வகுப்பறை இல்லாத நிலையில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, மரத்தடியே வகுப்பறையாக மாறியுள்ளது. மழை காலத்தில், இதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பள்ளிக்கு நிரந்தர கட்டட வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Blogger Widgets
Back to TOP Testf