வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள், தங்களுக்கான பயனர் அடையாளம் மற்றும் கடவுச் சொல்லைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி ஆணையர் மதியழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வைப்பு நிதி சந்தா செலுத்த, மின்னணு செலுத்துச் சீட்டு மற்றும் மாதாந்திர படிவம் எனும் திட்டம், கடந்த ஒன்றாம் தேதி கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, மாதாந்திர வைப்பு நிதி சந்தா செலுத்திய உடனே, அந்தந்த தொழிலாளர்களின் வைப்பு நிதி கணக்குகள், தானாகவே புதுப்பிக்கப்பட்டு விடும். நிர்வாகத்தினர், இணையதளத்தில், சம்பந்தப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்த பின்னரே, வைப்பு நிதி சந்தா செலுத்த முடியும். விவரங்களை கொடுத்தபின், இணையதளம் மூலம், செலுத்துச் சீட்டு பெற்றுக் கொண்டு, வங்கிகளில் வைப்பு நிதி சந்தா செலுத்தலாம். வேறு எவ்வித படிவமும் செலுத்த வேண்டியதில்லை.
இப்புதிய நடைமுறைப்படி, அனைத்து நிர்வாகத்தினரும், தங்களுக்கான பயனர் அடையாளம் (user id) மற்றும் கடவுச்சொல் (password) பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, www.epfindia.com அல்லது ro.tambaram@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம், அல்லது, 044-22265332 என்ற தொலைபேசி மூலம் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment about this post...