flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

சனி, ஏப்ரல் 28, 2012

தமிழகம் முழுவதும் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இரண்டு மாதங்களாகியும், அவர்களுக்கு இன்னும் சம்பள வழங்கப்பட வில்லை. அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், உடற்கல்வி, ஓவியம், கைத்தொழில் மற்றும் கணினி படிப்பு முடித்தவர்கள், மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். மார்ச் முழுவதும் பணியாற்றியும், முதல்மாத சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஏப்ரல் மாதமும் முடிய உள்ளது.

முதன்மைகல்வி அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது: சிறப்பாசிரியர்களுக்கு எஸ்.எஸ்.ஏ., மூலம் நிதி ஒதுக்கி, அந்தந்த கிராம கல்வி குழுவில் உள்ள தலைவர் மற்றும் தலைமையாசிரியர் கையெழுத்திட்டு, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். மார்ச் மாதத்தில் இடையிலும், கடைசியிலும் சிலர் பணியில் சேர்ந்துள்ளனர். அவர்கள் குறித்து கணக்கிடப்படுகிறது. ஒரு மாதத்தில் 12 நாள்கள் பணியாற்றி இருந்தால், முழு சம்பளம் வழங்கப்படும். குறைவான நாட்கள் எனில், அதற்கேற்ப சம்பளம் வழங்கப்படும். சில பள்ளிகளில் இருந்து ஆசிரியர் பட்டியல், பணியாற்றிய நாட்கள் விபரம் வரவில்லை. வந்தபின், ஒருசில நாட்களில் சம்பளம் வழங்கப்படும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment about this post...

Blogger Widgets
Back to TOP Testf