flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

ஆசிரியர்கள் பொதுமாறுதல் தொடர்பாக விண்ணப்பிக்கலாம் என்று நேற்று முன்தினம் பள்ளிக் கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை, நேற்று அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் அனைத்திலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிட மாறுதல் வழங்க கவுன்சலிங் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.
அதில், “அனைத்து அரசு மற்றும் நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் விருப்பம் உள்ளவர்கள் பொது மாறுதல் கவுன்சலிங்கில் பங்கேற்கலாம். அதற்கான விண்ணப்பங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் 28ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.
அவற்றை தொகுத்து 30ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோருவோர் விண்ணப்பங்கள் மே 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் நேற்று மாலை அவசரம் அவசரமாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு இ-மெயில் வந்தது. அதில் ????? மறு உத்தரவு வரும் வரை யாரும் மாறுதல் விண்ணப்பங்கள் பெறக்கூடாது ????? என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும், கவுன்சலிங் இல்லாமல் மறைமுகமாக மாறுதல் வழங்கப் போகிறார்களோ என்று சந்தேகம் அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment about this post...

Blogger Widgets
Back to TOP Testf