தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கல்வி மேம்பாட்டு பணிமனை பயிற்சி
திருநெல்வேலி:தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வள்ளியூர் வட்டார
கிளை சார்பில் கல்வி மேம்பாட்டு பணிமனை பயிற்சி 2 நாட்கள் நடந்தது.
முதல் நாள் நடந்த துவக்க விழாவிற்கு வட்டார தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். செயலாளர் மோதிலால் ராஜ் வரவேற்றார். இப்பயிற்சியை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுடலைமணி துவக்கி வைத்து பேசினார். மாநில பொது செயலாளர் ரங்கராஜன் சிறப்புரை ஆற்றினார்.
முதல் நாள் நடந்த துவக்க விழாவிற்கு வட்டார தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். செயலாளர் மோதிலால் ராஜ் வரவேற்றார். இப்பயிற்சியை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுடலைமணி துவக்கி வைத்து பேசினார். மாநில பொது செயலாளர் ரங்கராஜன் சிறப்புரை ஆற்றினார்.
மாநில துணை செயலாளர் ராஜேந்திரன், செய்யது இப்ராகிம் மூசா, மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் தர்மராஜ் பிராங்களின், பொருளாளர் சிவஞானம், மாநில செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ், வட்டார நிர்வாகிகள் உட்பட பலர் பேசினர்.வள்ளியூர் வட்டார பொருளாளர் அண்ணாமலை நன்றி கூறினார்.2ம் நாள் நடந்த நிறைவு விழாவுக்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தர்மராஜ் பிராங்களின் வரவேற்றார். பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பகவதி சான்றிதழ்களை வழங்கி பேசினார்.வள்ளியூர் ஏ.இ.ஓ கிறிஸ்டோபர் ஜெயக்குமார், கூடுதல் ஏ.இ.ஓ ராபர்ட் ஜான், வள்ளியூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சந்திரன், வள்ளியூர் வட்டார தலைவர் கருணாகரன், செயலாளர் மோதிலால் ராஜ், பொருளாளர் அண்ணாமலை உட்பட பலர் பேசினர்.இப்பயிற்சியை தேசிய பணிமனை பயிற்சி கருத்தாளர்கள் நல்லசிவன், ஜார்ஜ் இனிகோ ஆகியோர் நடத்தினர்.மாவட்ட பொருளாளர் சிவஞானம் நன்றி கூறினார்.