ராமநாதபுரம் :தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு செல்ல விருப்பம்
தெரிவித்துள்ள, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை உடனடியாக ஈர்த்துக் கொள்ள
கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் ராமநாதபுரம்
அரண்மனையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இவர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அகில இந்திய பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்து பேசியதாவது: எந்த மாவட்டத்திலும் இல்லாத நிலை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கிறது.
ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான விஷயமான உயர்நிலை பள்ளிகளுக்கு ஈர்த்து கொள்ள வேண்டியதை, ஏதோ சில காரணங்களை கூறி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புறக்கணித்து வருகிறார்.
கல்வித்துறை இயக்குனர்கள் கூறியும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பேசி தீர்க்கப்படவில்லையெனில் ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடையும், என்றார்.
மாநில பொருளாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் சாமி அய்யா முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் புல்லாணி, மருது, சந்திரன், செல்வராஜன், முருகன், அருள்செழியன், சத்குரு உட்பட பலர் பங்கேற்றனர்.
இவர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அகில இந்திய பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்து பேசியதாவது: எந்த மாவட்டத்திலும் இல்லாத நிலை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கிறது.
ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான விஷயமான உயர்நிலை பள்ளிகளுக்கு ஈர்த்து கொள்ள வேண்டியதை, ஏதோ சில காரணங்களை கூறி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புறக்கணித்து வருகிறார்.
கல்வித்துறை இயக்குனர்கள் கூறியும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பேசி தீர்க்கப்படவில்லையெனில் ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடையும், என்றார்.
மாநில பொருளாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் சாமி அய்யா முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் புல்லாணி, மருது, சந்திரன், செல்வராஜன், முருகன், அருள்செழியன், சத்குரு உட்பட பலர் பங்கேற்றனர்.