முதுநிலை விரிவுரையாளர் தேர்வு:619 பேரின் விண்ணப்பங்கள் ஏற்பு
மார்ச் 4ம் தேதி நடக்கும், முதுநிலை விரிவுரையாளர் பணிக்கான போட்டித்
தேர்வை எழுத, 619 பேர் தகுதி பெற்றுள்ளனர்.ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி இயக்ககத் துறையில், 34 முதுநிலை விரிவுரையாளர்களை நியமனம்
செய்வதற்கான போட்டித் தேர்வு, அடுத்த மாதம், 4ம் தேதி நடக்கிறது.இதற்கு,
830 பேர் விண்ணப்பம் செய்ததில், 619 பேர் தேர்வெழுத தகுதி பெற்றுள்ளனர்.
விண்ணப்பதாரர்களுக்கு, மார்ச் 1ம் தேதிக்குள், "ஹால் டிக்கெட்' கிடைக்கும்
வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.தேர்வர்கள்
எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், அனைத்துப் பாடங்களுக்கும் சேர்த்து,
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தேர்வு
நடைபெறும் என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment about this post...